சரிவுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.;
மும்பை,
வார இறுதி நாளான இன்று (21.11.2025 -வெள்ளிக்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 124 புள்ளிகள் சரிந்த நிப்டி 26 ஆயிரத்து 68 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 480 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 867 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
அதேபோல், 295 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 566 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 400 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 85 ஆயிரத்து 231 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
140 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 851 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 524 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 144 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.