டெல்லி: சாலை விபத்தில் மூன்று பேர் பலி, ஒருவர் காயம்

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2025-06-15 20:01 IST

புதுடெல்லி,

வடக்கு டெல்லியில் உள்ள பவானா தொழில்துறை பகுதியில், பைக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் வந்த மற்றொரு டெம்போ வாகனம் ஒன்று பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்தார்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இறவதவர்களின் உடலை மீட்ட போலீசார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்கள் பவானாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பணிபுரிந்த பிஜய் (38), ராமகாந்த் (30) மற்றும் நந்து குமார் (23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த 19 வயது ராஜாராம் நம்லேஷ், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்