அருணாச்சல பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்

அருணாச்சல பிரதேசத்தில் இன்று மாலை 6.36 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update:2025-07-28 21:34 IST

புதுடெல்லி,

அருணாச்சல பிரதேசத்தின் திராப் பகுதியில் இன்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. மாலை 6.36 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் 7 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 27.06 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 95.42 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்