தொடர்ந்து 4-வது நாளாக நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 4 நாட்களிலும் குறிப்பிட்ட அலுவல்கள் எதுவும் நடைபெறாமல் நாடாளுமன்றம் முடங்கியது.;

Update:2025-07-24 15:31 IST

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதில் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் போன்ற பிரச்சினைகள் பெரும் புயலை கிளப்பி வருகின்றன.

இந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருவதால் முதல் 3 நாட்களும் இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில், இன்று காலை அவை கூடியதும் மீண்டும் அதே கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும், கேள்வி நேரம் நடந்து கொண்டிருந்தது.

இதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தை கைவிடக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டன. இவ்வாறு மழைக்கால கூட்டத்தொடரின் முதல் 4 நாட்களிலும் குறிப்பிட்ட அலுவல்கள் எதுவும் நடைபெறாமல் நாடாளுமன்றம் முடங்கி வருவது அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்