தொழிலதிபரின் வீட்டில் சமையல் பாத்திரத்தில் சிறுநீர் கழித்த பணிப்பெண்; அதிர்ச்சி வீடியோ

10 வருடங்களாக அவர் அந்த வீட்டில் வேலை செய்து வருகிறார்.;

Update:2025-08-24 13:28 IST

பிஜ்னோர்,

உத்தர பிரதேசத்தின் பிஜ்னோர் நகரில் தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் சமையல் வேலைக்காக சமந்திரா என்பவர் பணிப்பெண்ணாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், சில நாட்களாக அவருடைய நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு, அவருடைய செயல்களை அவருக்கே தெரியாமல் தொழிலதிபர் படம் பிடித்து உள்ளார்.

இந்த ரகசிய நடவடிக்கையில் தொழிலதிபருக்கு திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. சமையலறையில் பாத்திரத்தில் அந்த பணிப்பெண் சிறுநீர் கழிக்கும் வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தன. பின்னர் அதனை பன்னீர் தெளிப்பது போன்று பாத்திரங்களில் தெளித்து விட்டிருக்கிறார்.

ஏறக்குறைய 10 வருடங்களாக அவர் அந்த வீட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி தெரிவித்து வருகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர். சமந்திராவுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து நாகினா போலீசார் சமந்திராவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

2024-ம் ஆண்டு அக்டோபரில் காசியாபாத் நகரில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் பலருக்கு கடுமையாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டு சோர்வடைந்தனர். இதனை அந்த தொழிலதிபர் கவனித்து, எதனால் அவர்கள் உடல்நலம் கெட்டுள்ளது என யோசித்துள்ளார்.

சமையலறையில் ரகசிய கேமரா வைத்து கவனித்ததில், அந்த பணிப்பெண் உணவில் சிறுநீரை கலக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனை தொடர்ந்து உடனடியாக தொழிலதிபர் போலீசில் புகார் அளித்து உள்ளார். அந்த பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்