ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: மத்திய அரசுக்கு சசி தரூர் பாராட்டு

பயங்கரவாதிகள் கூடாரங்களை தாக்கி அழித்த இந்திய ராணுவத்திற்கும், மத்திய அரசுக்கும் சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.;

Update:2025-05-08 12:16 IST

திருவனந்தபுரம்,

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து இந்திய ராணுவம், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கையை அரசியல் தலைவர்கள் பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில், திருவனந்தபுரம் எம்.பி சசி தரூரும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்காக மத்திய அரசை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா சரியான பதிலடியை கொடுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மிகவும் துல்லியமாக இருந்தது. பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக, இரவு நேரத்தில் தாக்குதலை நடத்தியது மிகவும் புத்திசாலித்தனமான செயலாகும். இந்த தாக்குதலானது பாகிஸ்தானுடன் மோதலை அதிகரிப்பதற்காக நடந்தது அல்ல.

இந்திய மண்ணில் பயங்கரவாத தாக்குதலை நடத்தினால், என்ன மாதிரியான விளைவுகள் இருக்கும் என்பதை காட்டுவதற்காகத் தான். மேலும் தாக்குதலை நடத்த இந்தியாவுக்கு எந்த திட்டமும் இல்லை. பதற்றத்தை தணிக்கும் பொறுப்பு பாகிஸ்தானிடம் தான் உள்ளது. இந்தியாவுடன் போர் தொடக்க விரும்பினால், பாகிஸ்தான் 4 நாட்கள் கூட தாங்காது. நீண்ட போரை நடத்த பாகிஸ்தானால் முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்