தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் சாவு

புதுவையில் வெவ்வேறு விபத்துகளில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-09-07 17:39 GMT

வில்லியனூர்

வில்லியனூர் அருகே உள்ள பொறையூர் கோல்டன்சிட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 47). தனியார் நிறுவன ஊழியர். நேற்று இரவு வேலை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். வில்லியனூர் - பத்துக்கண்ணு சாலை மூர்த்திநகர் ரெயில்வே கேட் அருகே சென்றபோது, பின்பக்கமாக வந்த டிப்பர் லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக முருகனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த முருகன் மீது டிப்பர் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துபோனார். விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெட்டியார்பாளையம் ரத்னா நகரை சேர்ந்தவர் நடராஜன் (71). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் சம்பவத்தன்று அதிகாலை தனது ஸ்கூட்டரில் நடைபயிற்சி செல்வதற்காக கடற்கரை நோக்கி சென்றார். ராஜீவ்காந்தி சிலை அருகே சென்றபோது கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து வந்த டேங்கர் லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியதில், நடராஜன் படுகாயம் அடைந்தார். அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து போனார்.

Tags:    

மேலும் செய்திகள்