புதுச்சேரியில் ஜூலை 2-ந்தேதி வரை விமான சேவை ரத்து

புதுச்சேரியில் இருந்து ஜூலை 2-ந்தேதி வரை விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-19 16:45 GMT

புதுச்சேரி

புதுவையில் இருந்து ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாள்தோறும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான பராமரிப்பு பணிகளுக்காக அவ்வப்போது நிறுத்தப்படுகிறது. இந்தநிலையில் வருகிற ஜூலை 2-ந்தேதி வரை விமான சேவை தற்காலிமாக நிறுத்தப்பட்டு உள்ளது. விமான சேவை திடீரென்று ரத்து செய்யப்படுவதால் விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்