4 கால்களுடன் பிறந்த அதிசய கோழி குஞ்சு

திருநள்ளாறில் 4 கால்களுடன் பிறந்த அதிசய கோழி குஞ்சை பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டனர்.

Update: 2022-11-24 16:51 GMT

திருநள்ளாறு

காரைக்கால மாவட்டம் திருநள்ளாறு பூமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் சக்தி முருகன். இவர் தனது வீட்டில் கோழிகள் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் 10-க்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் பொறித்தது. இதில் ஒரு கோழி மட்டும் வித்தியாசமாக நடந்தது. அதனை உற்று நோக்கிய போது, அந்த கோழி குஞ்சிக்கு 4 கால்கள் இருந்தது. அதாவது 2 கால்கள் பெரிதாகவும், மற்ற 2 கால்கள் சிறிதாகவும் இருந்தது.

இதை கண்டு சக்தி முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆச்சரியம் அடைந்தனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியது. இதை அறிந்த திரளான பொதுமக்கள் அந்த அதிசய கோழிக்குஞ்சை வியப்புடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்