தூத்துக்குடியில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு வாலிபர் கடந்த ஒரு மாத காலமாக தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.;

Update:2025-10-31 07:57 IST

தூத்துக்குடி முத்தையாபுரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (வயது 24), தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஒரு மாத காலமாக தனது உறவுக்கார பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெண்ணின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மன வேதனை அடைந்த மாரிமுத்து நேற்று முன்தினம் இரவு தனது படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று மதியம் வரை அவர் கதவை திறந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் கதவு உள்பக்கமாக பூட்டி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து ஜன்னல் வழியாக பார்த்த போது மாரிமுத்து வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்