ரூ.3,000 கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் - தமிழக அரசு அறிவிப்பு

மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி கோட்டை அலுவலகத்தில் ஏலம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-28 19:32 IST

சென்னை,

தமிழ்நாடு அரசு மொத்தம் ரூ.3,000 கோடி மதிப்பில், 2 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1,000 கோடி, 9 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1,000 கோடி மற்றும் 30 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1,000 கோடி ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் செப்டம்பர் 2-ந்தேதி நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11.00 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் [Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) செப்டம்பர் 02, 2025 அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்