கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

,;

Update:2025-06-10 07:10 IST

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணன் விளாகம் பகுதியை சேர்ந்தவர் ரசல் ராஜ் (வயது 55). இவர் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். ரசல் ராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கடன் தொல்லையும் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த ரசல் ராஜ் நேற்று முன் தினம் வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் தொல்லையால் கலெக்டர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்