தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

திருவள்ளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி விழுப்புரம் உள்பட 9 மாவட்ட கலெக்டர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2025-01-31 15:49 IST

சென்னை,

தமிழகத்தில் 9 மாவட்ட கலெக்டர்கள், உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன் விவரம் வருமாறு:

*நெல்லை  மாவட்ட கலெக்டராக இருந்த கார்த்திகேயன் மாற்றம்; புதிய ஆட்சியராக ஆர்.சுகுமார் நியமனம்

*தருமபுரி மாவட்ட   கலெக்டராக ஐஏஎஸ் அதிகாரி சதீஷ் நியமனம்

* திண்டுக்கல் கலெக்டராக சரவணன் நியமனம்.

*கிருஷ்ணகிரி கலெக்டராக  தினேஷ்குமார் நியமனம்.

* விழுப்புரம் மாவட்ட கலெக்டராக ஷேக் அப்துல் ரகுமான் நியமனம்

* திருவண்ணாமலை கலெக்டராக தர்ப்பகராஜ் நியமனம்

* திருப்பத்தூர்  கலெக்டராக மோகனசந்திரன் நியமனம்

*திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி வணிகவரித்துறையின் இணை ஆணையராக நியமனம்

* தருமபுரி கலெக்டர்  சாந்தி, பட்டுப்பூச்சி வளர்ப்பு துறை இயக்குநராக மாற்றம்

* தொழில் நுட்ப கல்வி ஆணையராக இன்னசண்ட் திவ்யா நியமனம்

*கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனராக கண்ணன் நியமனம்

*நகராட்சி நிர்வாக இணை ஆணையராக ஐ.ஏ.எஸ் அதிகாரி லலித் ஆதித்ய நீலம் நியமனம்

Tags:    

மேலும் செய்திகள்