காந்தி ஜெயந்தி: கன்னியாகுமரியில் நாளை மதுக்கடைகள் மூடல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் நாளை செயல்படாது என மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.;
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்டோபர் 2-ந் தேதி (நாளை) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக்கடைகள் மற்றும் எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.