செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி
செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி என முதல்-அமைச்சர் பதிவிட்டுள்ளார்.;
ன்னை,
யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரிய சின்னங்களுக்கான பட்டியலில் தமிழகத்தின் செஞ்சிக் கோட்டை இடம்பெற்றுள்ளது. செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
"'கிழக்கின் ட்ராய்' என அறியப்படும் செஞ்சிக் கோட்டை இந்தியாவில் உள்ள மராட்டிய இராணுவத் தலங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
சோழர் கோவில்கள், மாமல்லபுரம், நீலகிரி மலை ரெயில், மேற்குத் தொடர்ச்சி மலை ஆகியவற்றின் வரிசையில் தமிழ்நாட்டில் இருந்து கம்பீரமான செஞ்சி மலைக்கோட்டை இப்பட்டியலில் தற்போது இணைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கும் அதன் நிலைத்த பண்பாட்டு மரபுக்கும் பெருமிதத் தருணமாக இது அமைந்துள்ளது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.