23ம் தேதி முதல் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆய்வு
குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகின்ற 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 3.10.2025 அன்று வரை நடைபெற உள்ளது.;
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் இந்த ஆண்டு முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகின்ற 23.9.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 3.10.2025 அன்று வரை நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு லட்சகணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தரிசனத்திற்கு வருவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் நேற்று குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் வளாகம், வாகனம் நிறுத்துமிடம், கோவிலுக்கு செல்லும் வழித்தடங்கள், சூரசம்காரம் நடைபெறும் இடம், தசரா குழுவினரின் வழித்தடம், பக்தர்களின் தரிசன பாதை உட்பட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி போக்குவரத்து மாற்றங்கள் உள்ள சாலைகளில் அது குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க உத்தரவிட்டு அறிவுரைகள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் உட்கோட்ட டி.எஸ்.பி. மகேஷ்குமார், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு பாஸ்கர் உள்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.