இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா: நாளை கொடியேற்றம்
இருக்கன்குடி மாரியம்மன் கோவிவில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.;
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும்.
அதேேபால இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஆடி கடைசி வெள்ளியன்று அதாவது வருகிற 15-ந் தேதி சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடக்கின்றன.
காலை 9 மணி முதல் 10 மணி வரையில் அம்மனுக்கு கும்ப பூஜை, யாக பூஜை நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி பிற்பகலில் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு கோவிலில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் இளங்கோவன், அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர்கள், கோவில் அதிகாரிகள், பணியாளர்கள் செய்துவருகின்றனர்.