நாளை ம.நீ.ம. செயற்குழு கூட்டம் - கமல்ஹாசன் அறிவிப்பு

ம.நீ.ம. செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2026-01-23 10:59 IST

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் வௌக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நமது தலைவர், மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் தலைமையில்  வருகிற ஜனவரி 24-ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிரார்கள்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்