மனோரமா மகன் பூபதி மறைவு: மு.வீரபாண்டியன் இரங்கல்

பூபதி இன்று காலை சென்னையில் காலமானார் என்ற துயரச் செய்தியறிந்து வேதனையுற்றோம் என தெரிவித்துள்ளார்.;

Update:2025-10-23 15:34 IST

சென்னை,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ் திரையுலகில் தனி முத்திரை பதித்த ஆச்சி மனோரமாவின் மகனும், நடிகருமான பூபதி (70) இன்று (23.10.2025) காலை சென்னையில் காலமானார் என்ற துயரச் செய்தியறிந்து வேதனையுற்றோம்.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் நிலைத்து, நீடித்த சிறப்புக்குரிய நகைச்சுவைக் கலைஞர் மனோரமா, இவரது ஒரே மகன் பூபதி. சில திரைப்படங்களில் நடித்துள்ளார். காலமான பூபதியின் வாழ்விணையர் தனலட்சுமி, மகன் பி.ராஜராஜன், மகள்கள் அபிராமி, மீனாட்சி ஆகியோர் இருக்கின்றனர்.

அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கலையுலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது. வருத்தத்துடன்,

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்