மகள் இறந்த துக்கத்தில் தாய் தீக்குளித்து தற்கொலை

மகள் இறந்ததால் அமுதவள்ளி மனமுடைந்த நிலையில் இருந்தார்.;

Update:2025-11-10 20:12 IST

கோப்புப்படம் 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்தவர் சுடலைமுத்து. இவருடைய மனைவி அமுதவள்ளி (55 வயது). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. மகளுக்கு திருமணமாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுடலைமுத்து இறந்து விட்டார். பின்னர் கடந்த ஆண்டு அமுதவள்ளியின் மகளும் உடல்நலக்குறைவால் அம்பையில் இறந்து விட்டார். இதனால் அமுதவள்ளி மனமுடைந்த நிலையில் இருந்தார்.

நேற்று அதிகாலையில் அமுதவள்ளி தனது வீட்டில் திடீரென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீசார் விரைந்து சென்று, அமுதவள்ளியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்