சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

போலீஸ் கமிஷனர் அருண் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.;

Update:2025-10-10 05:25 IST

சென்னை,

சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமிஷனர் அருண் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுதாகர் காசிமேடு மீன்பிடி துறைமுகம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்னொரு இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் தலைமை செயலக காலனி சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கும் மாற்றப்பட்டனர். இன்ஸ்பெக்டர் பென்சாம்டி.பி.சத்திரம் சட்டம்-ஒழுங்கு பிரிவில் பதவியேற்பார்.

மாம்பலம் சட்டம்-ஒழுங்கு பிரிவுக்கு விமல் நியமிக்கப்பட்டார். ரஜினிகாந்த் கொடுங்கையூருக்கும், டி.சரவணன் புழலுக்கும், இளங்கோவன் வியாசர்பாடிக்கும் சட்டம்-ஒழுங்கு பிரிவு இன்ஸ்பெக்டர்களாக நியமிக்கப்பட்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்