ராமநாதபுரம்: மின்னல் தாக்கி அக்கா, தங்கை உயிரிழப்பு

வயலில் வேப்ப விதைகள் சேகரித்தபோது மின்னல் தாக்கியதில் அக்கா, தங்கை உயிரிழந்தனர்.;

Update:2025-08-23 21:25 IST

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியகுடி ஊராட்சி வாழவந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் நூருல் அமீன். தனியார் பேருந்து டிரைவர். இவருடைய மகள்கள் செய்யது அஸ்பியா பானு (13 வயது), சபிக்கா பானு (9 வயது). மூத்த மகள் சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பும், இளைய மகள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அக்கா, தங்கை இருவரும் வீட்டின் அருகே வயலில் வேப்ப விதைகள் சேகரிக்க சென்றனர். அப்போது இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மின்னல் தாக்கியதில் செய்யது அஸ்பியா பானு, சபிக்கா பானு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்