திருப்பூர் எஸ்.எஸ்.ஐ. கொலை வழக்கு; 2 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர்.;

Update:2025-08-07 22:25 IST

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் அ.தி.மு.க. மகேந்திரன் எம்.எல்.ஏ. மகேந்திரன் தோட்டத்தில் அப்பா, மகன் உள்ளிட்ட 4 பேர் மோதலில் ஈடுபட்டுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து, விசாரணை நடத்துவதற்காக அங்கு எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் மற்றும் காவலர் ஆகியோர் சென்றுள்ளனர்.

மோதலை தடுத்து சமாதானப்படுத்த முயன்றபோது, அவர்கள் எஸ்.எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டி கொன்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் உடலுக்கு காவல் துறை அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Advertising
Advertising

இந்நிலையில், எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை வழக்கில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் ஆகிய 2 பேர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சரண் அடைந்தனர். இதனிடையே மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் கைதான தந்தை மூர்த்தி, மகன் தங்கபாண்டிக்கு 15 நாட்கள் (ஆகஸ்ட் 21 வரை) நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்