இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;

Update:2025-11-28 09:12 IST


Live Updates
2025-11-28 14:34 GMT

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகள் திரையுலகில் புரிந்த சாதனைகளுக்காக கோவாவில் நடைபெற்று வரும் 56ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது. 

2025-11-28 14:19 GMT

டிட்வா புயல் எதிரொலி: கள்ளக்குறிச்சியில் நாளை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

2025-11-28 14:09 GMT

நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2025-11-28 13:51 GMT

டிட்வா புயல் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முகாமிட்டுள்ளனர். அறந்தாங்கியில் 35 பேர் கொண்ட அணி, தகுந்த மீட்புக் கருவிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

2025-11-28 13:44 GMT

டிட்வா புயல் எதிரொலி: விழுப்புரம் மாவட்டத்தில் நாளை(29.11.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

2025-11-28 13:44 GMT

நாகையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

2025-11-28 13:44 GMT

டிட்வா புயல் எதிரொலி: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

2025-11-28 13:43 GMT

டிட்வா புயல் எதிரொலி: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

2025-11-28 13:42 GMT

2025-26 ஆண்டின் 2ஆம் காலாண்டில் 8.2% உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஊக்கமளிக்கிறது நமது வளர்ச்சி, ஆதரவு கொள்கைகள், சீர்திருத்தங்களின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது; நமது அரசு தொடர்ந்து சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் சென்று ஒவ்வொருவரின் வாழ்வை எளிதாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

2025-11-28 12:37 GMT

இலங்கையில் டிட்வா புயலால் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் மீண்டுவர பிரார்த்திக்கிறேன்; சாகர் பந்து திட்டத்தின் கீழ் அண்டை நாடான இலங்கைக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும்; மகாசாகர் திட்டத்தின்கீழ் இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்துதர தயாராக உள்ளோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்