திருச்சி-தாம்பரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை ரெயில் சேவை நீட்டிக்கப்படுகிறது.;
திருச்சி,
திருச்சி - தாம்பரம் இடையே வாரந்தோறும் செவ்வாய், புதன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில்கள் (வண்டி எண் 06190-06191) வருகிற 31-ந்தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த ரெயில்கள் நவம்பர் மாதம் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில்கள் இருமார்க்கத்திலும் கூடுதலாக 65 முறை இயக்கப்படுகிறது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.