த.வெ.க. மாநாடு: தேசிய நெடுஞ்சாலை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றம்

த.வெ.க. மாநாட்டு திடல் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.;

Update:2025-08-20 16:48 IST

மதுரை,

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் அக்கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் நாளை(வியாழக்கிழமை) நடக்கிறது.

இதற்காக 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மீதம் உள்ள பணிகளை ஏற்பாட்டு குழுவினர் இரவு, பகலாக செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், த.வெ.க. மாநாட்டு திடல் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, கோர்ட்டு உத்தரவின்படி பேனர்களை அகற்ற த.வெ.க. நிர்வாகிகளிடம் காவல்துறையினர் அறிவுறுத்தினர். காவல்துறை அறிவுறுத்தலை ஏற்று த.வெ.க. நிர்வாகிகள் பேனர்களை அகற்றி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்