குடும்ப தகராறில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள பகுதியில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.;

Update:2026-01-27 19:32 IST

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் மகன் ரகுநாத் (வயது 25), கூலித் தொழிலாளி. இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி மனைவியும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரகுநாத், மனைவி இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததை தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரகுநாத் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாசார்பட்டி போலீசார் விரைந்து சென்று ரகுநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்