தமிழகத்தில் 3 இடங்களில் இன்று 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவு

தமிழகத்தில் 3 இடங்களில் இன்று வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-03-08 19:24 IST

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு, பனிக்காலம் தொடங்கியது. பனிக்காலத்தில் அதிகாலை நேரங்களில், சாலைகளில் மூடுபனி தென்பட்டது. பொது மக்களுக்கு இதமான சூழலும் நிலவியது. தற்போது, பனிக்காலம் ஓய்ந்து, வெயில் காலம் தொடங்கி விட்டது.

நாட்டிலேயே அதிகபட்சமாக ஆந்திராவின் கர்னூலில் இன்று 102.92 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதே போல் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், கோடை காலத்தின் தொடக்கத்திலேயே வெயில் வாட்டி எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கரூர் மற்றும் ஈரோட்டில் இன்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது. இதன்படி கரூர் பரமத்தியில் 100.4 டிகிரி, ஈரோட்டில் 100.76 டிகிரி அளவிற்கு வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதுரை விமான நிலையம் பகுதியில் 99.86 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வரும் 10-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும், ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்