நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் மோடியின் கரத்தில் இருந்து வெற்றி நழுவி விட்டது - ராகுல் காந்தி

இந்தியாவில் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை காங்கிரஸ் உருவாக்கும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Update: 2024-04-25 23:31 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. அதேநேரம் அடுத்தடுத்த கட்ட தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

காங்கிரசின் வாக்குறுதிகள் சிலவற்றை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்கள் மாதந்தோறும் ரூ.8,500 பெறுவார்கள். இளைஞர்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் பெறும் வேலைவாய்ப்பு பெறுவார்கள். 30 லட்சம் காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டப்பூர்வமாக்கப்படும்.

இந்தியர்களின் ஒரு அரசை காங்கிரஸ் வாக்குறுதி அளித்து உள்ளது. இந்தியாவில் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை காங்கிரஸ் உருவாக்கும்.

ஆனால் அதானியின் அரசு, நாட்டின் வளங்கள் அனைத்தும் கோடீஸ்வரர்களின் பாக்கெட்டை சென்றடையும், தொழிலதிபர்களிடம் நன்கொடை வசூலிக்கும் கும்பல், அரசியல் சாசனமும், ஜனநாயகமும் அழிந்து விடும், விவசாயிகளுக்கு நிதி நெருக்கடி ஆகியவைதான் மோடியின் உத்தரவாதம் ஆகும். இந்தியாவில் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை காங்கிரஸ் உருவாக்கும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.எனவே இரண்டு வாக்குறுதிகளுக்கும் இடையேயான வேறுபாடு தெளிவாக உள்ளது.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் பிரதமரின் கரத்தில் இருந்து நழுவி விட்டது. இது அவருக்கும் தெரியும்" என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

முன்னதாக, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கோடிக்கணக்கான லட்சாதிபதிகளை உருவாக்குவோம் என ஆந்திராவின் அமராவதியில் நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திலும் ராகுல் காந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் ரூ.16 லட்சம் கோடி அளவிலான கடன்களை தள்ளுபடி செய்ததால் 20 முதல் 25 பேர் கோடீஸ்வரர் ஆகியிருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்