சேலம் தொகுதி: தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு

தமிழகத்தில் வேட்புமனுக்களுக்கான பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.

Update: 2024-03-28 08:15 GMT

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழகத்தில் 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜனதா தலைமையில் மற்றொரு கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனியாகவும் இந்த தேர்தலில் களம் இறங்கியுள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று நிறைவடைந்தது.

இந்நிலையில், இன்று காலை முதல் பெறப்பட்ட வேட்புமனுக்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிசீலனை செய்து வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இரட்டை வாக்காளர் பிரச்சினை எழுப்பப்பட்டதால் விளக்கம் கொடுக்கும் வரை பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரி அறிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்