சாம்பியன்ஸ் டிராபி: பும்ரா விளையாட வாய்ப்பு இல்லை..? வெளியான தகவல்

பும்ராவின் உடற்தகுதி குறித்து முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2025-01-27 23:16 IST

image courtesy: AFP

மும்பை,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது தொடக்க லீக்கில் பிப்.20-ந்தேதி வங்காளதேசத்தையும், 23-ந்தேதி பாகிஸ்தானையும், மார்ச்.2-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இடம் பெற்றுள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடருக்கு முன்னர் காயத்திலிருந்து குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வேளையில் தற்போது அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாட வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாடியபோது பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நாடு திரும்பிய அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

ஆனாலும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னர் அவர் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இருந்தால் அது அதிசயம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவ அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஒருவேளை அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் அவர் நியூசிலாந்துக்கு அனுப்பப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்