வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி: நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாட்டம்

52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்;

Update:2025-11-03 02:30 IST

மும்பை,

13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம், மும்பை புறநகரான நவிமும்பையில் உள்ள டி.எஸ். பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 45.3 ஓவர்களில் 246 ரன்களில் சுருணது. இதன் மூலம் இந்தியா 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பையை தட்டி தூக்கியது.

52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு இரண்டு முறை இறுதி ஆட்டத்தில் (2005 மற்றும் 2017) தோற்றிருந்த இந்திய அணி இந்த முறை அந்த ஏக்கத்தை தணித்து ரசிகர்களுக்கு தித்திப்பான பரிசை அளித்துள்ளது. மகுடம் சூடிய இந்திய அணிக்கு ரூ.39½ கோடியும், 2-வது இடத்தை பிடித்த தென்ஆப்பிரிக்காவுக்கு 19¾ கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்