மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை: வங்காளதேச அணி அறிவிப்பு
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது.;
Image Courtesy: @ICC
டாக்கா,
13-வது மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அடுத்த மாதம் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் களம் காணுகின்றன.
இவை தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். தொடக்க ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நிகர் சுல்தானா ஜோட்டி தலைமையிலான அந்த அணியில் 15 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
வங்காளதேச அணி விவரம்:
நிகர் சுல்தானா ஜோட்டி (கேப்டன்), நஹிதா அக்டர் (துணை கேப்டன்), பர்சானா ஹக், ரூப்யா ஹைதர் ஜெலிக், ஷர்மின் அக்தர் சுப்தா, சோபானா மோஸ்டரி, ரிது மோனி, ஷோர்னா அக்தர், பஹிமா காதுன், ரபேயா கான், மருபா அக்தர், பரிஹா இஸ்லாம் த்ரிஸ்னா, ஷஞ்சிதா அக்தர் மாஹ்லா, நிஷிதா அக்தர், சுமையா அக்தர்.