உலக கோப்பை மகளிர் செஸ்: 2-வது சுற்றில் இந்திய வீராங்கனைகள் வைஷாலி, வந்திகா வெற்றி

இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.;

Update:2025-07-12 16:23 IST

image courtesy:PTI

படுமி,

பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடர் 6 சுற்றுகள் மற்றும் இறுதிப்போட்டியை கொண்டது.

இதில் இந்திய வீராங்கனை தமிழகத்தை சேர்ந்த வைஷாலி நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கனடா வீராங்கனை மைலி-ஜேட் ஓவெலெட் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் வைஷாலி 2-0 என்ற கணக்கில் கனடா வீராங்கனையை வீழ்த்தினார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான வந்திகா அகர்வால் முன்னாள் உலக சாம்பியனான உக்ரைனின் அன்னா உஷேனினாவை தோற்கடித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்