பாகிஸ்தானில் ஆற்றில் படகு கவிழ்ந்து 8 பேர் சாவு


பாகிஸ்தானில் ஆற்றில் படகு கவிழ்ந்து 8 பேர் சாவு
x
தினத்தந்தி 18 Nov 2019 10:30 PM GMT (Updated: 18 Nov 2019 8:52 PM GMT)

பாகிஸ்தானில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஒக்ரா மாவட்டத்தில் திபால்பூர் நகரில் உள்ள சுத்லெஜ் ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த படகில் 40 பேர் பயணம் செய்தனர்.

மல்கு ஷெஜ்கா என்ற இடத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.

இந்த விபத்து குறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மீட்பு குழுவினர் படகுகளில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் அதற்குள் 8 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர். அவர்களது உடல் மீட்கப்பட்டன. அதே சமயம் நீரில் தத்தளித்துக்கொண்டிருந்த 10 பேரை மீட்புபடையினர் பத்திரமாக மீட்டனர்.

மேலும் 22 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

Next Story