அமெரிக்காவில் டிரம்ப் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் ஈரானை சேர்ந்தவர் கைது


அமெரிக்காவில் டிரம்ப் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் ஈரானை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 11 Jan 2020 8:24 PM GMT (Updated: 11 Jan 2020 8:24 PM GMT)

அமெரிக்காவில் டிரம்ப் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் நின்ற ஈரானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பிராட்லி பார்க் என்ற இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சொந்தமான சொகுசு வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நின்ற மர்மநபரை போலீசார் பிடித்தனர். விசாரணையில், பிடிபட்டவர் ஈரானை சேர்ந்த மசூத் யாரில்சோலே என்பதும், அவர் அமெரிக்காவில் தங்கி இருந்ததும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், ஆயுதங்களுடன் எதற்காக அவர் டிரம்ப் வீட்டிற்கு சென்றார் என அமெரிக்க போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

அமெரிக்கா - ஈரான் இடையே போர் ஏற்படும் அபாயம் நிலவும் நிலையில், டிரம்ப் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் ஈரானை சேர்ந்தவர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story