பாகிஸ்தானுக்கு ரூ.19 ஆயிரத்து 600 கோடி கடன் வழங்கிய சீனா


பாகிஸ்தானுக்கு ரூ.19 ஆயிரத்து 600 கோடி கடன் வழங்கிய சீனா
x

பாகிஸ்தானின் 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை சீனா கடனாக வழங்கியுள்ளது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. அந்த நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு தீரும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா, அந்த நாட்டுக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.19 ஆயிரத்து 600 கோடி) கடனாக வழங்கியுள்ளது.

அடுத்த 2 நிதியாண்டுகளில் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையில் கீழ் சீனா இந்த கடனை வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் தர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த 2 ஆண்டுகளிலும் கடனுக்கான வட்டியை பாகிஸ்தான் செலுத்தும் எனவும் அவர் கூறினார்.


Next Story