படத்தில் நடிக்க வைப்பதாக விஜய்தேவரகொண்டா பெயரில் மோசடி

படத்தில் நடிக்க வைப்பதாக விஜய்தேவரகொண்டா பெயரில் மோசடி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-09-15 23:51 GMT
தமிழில் வெளியான நோட்டா படத்தில் கதாநாயகனாக நடித்தவர் விஜய் தேவரகொண்டா, இவரது டியர் காமரேட் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது. அர்ஜூன் ரெட்டி தெலுங்கு படத்தின் வெற்றிக்கு பிறகு ஆந்திராவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார். தற்போது பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சில பட நிறுவனங்கள் விஜய்தேவரகொண்டாவை கதாநாயகனாக வைத்து புதிய படம் தயாரிப்பதாக சொல்லி கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகைகள் தேர்வை நடத்தி வந்தன. இதில் பணமோசடி நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனை விஜய்தேவரகொண்டா கண்டித்துள்ளார். அவர் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், “சில பட நிறுவனங்கள் விஜய்தேவரகொண்டாவை வைத்து படம் எடுப்பதாக பொய்யான தகவலை சொல்லி நடிகர் நடிகைகள் தேர்வு நடத்துவதை அறிந்தோம். இதுபோன்ற மோசடி பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களை போன்றவர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்