அழகி ஐஸ்வர்யா ராயின் முகத்தில் சுருக்கங்கள், அதிர்ச்சி தரும் குளோசப் புகைப்படம்!

திருமணமாகி குழந்தையுடன் இருந்தாலும்... உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர்களைக் கொண்டுள்ளார் ஐஸ்வர்யா ராய்.

Update: 2023-05-30 05:04 GMT

மும்பை

பாலிவுட்டின் ராணி என்று கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு, 1997-ல் மணிரத்னத்தின் 'இருவர்' படத்தில் கதாநாயகியாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார். இதையடுத்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

'அவுர் பியார் ஹோகயா' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான இவர், பின்னர் பல பாலிவுட் படங்களில் நடித்தார். முன்னணி நடிகையாக இருக்கும்போதே ஐஸ்வர்யா ராய் பல முன்னணி நடிகர்களை காதலித்து வந்தார். அபிஷேக் பச்சனுடன் குரு படத்தில் நடித்த பிறகு இருவருக்கும் இடையே காதல் வளர்ந்தது. அதை தொடர்ந்து திருமணமாகி தற்போது அவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

திருமணமாகி குழந்தையுடன் இருந்தாலும்... உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர்களைக் கொண்டுள்ள ஐஸ்வர்யா ராய், தனது மனதுக்கு நெருக்கமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதனால் கடைசியாக மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தின் 2 பாகங்களில் நடித்தார். இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட் ஆனது.ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.

ஐஸ்வர்யா தனது ஐம்பது வயதிலும் சுருக்கமில்லாமல் ஜொலிக்கிறாரா என்று பலர் நினைக்கலாம். ஆனால் அழகையும் இளமையையும் பராமரிக்க எத்தனை சிகிச்சைகள் செய்தாலும், விலையுயர்ந்த மேக்கப் கருவிகளை பயன்படுத்தினாலும் வயது ஏற ஏற உடலில் மாற்றங்கள் நிகழ்கின்றன.இப்போது ஐஸ்வர்யா ராய் குளோசப் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஐஸ்வர்யா ராயின் மேக்கப்பையும் மீறி முகத்தில் சுருக்கங்கள் தென்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்