போட்டோவை வைத்து தவறாக பேசக் கூடாது - கங்கனா ரனாவத்

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்-ஆக இருக்கும் கங்கனா அவ்வப்போது சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார்.

Update: 2024-01-25 21:45 GMT

மும்பை, 

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் 'சந்திரமுகி 2' திரைப்படமும் மற்றும் இந்தியில் 'தேஜஸ்' திரைப்படமும் வெளியாகின. இரண்டு படங்களும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று தோல்வியை சந்தித்தது. கடந்த ஆண்டு 'மணிகர்ணிகா பிலிம்ஸ்' நிறுவனம் சார்பில் இவர் தயாரித்த டிக்கு வெட்ஸ் சிரு திரைப்படமும் மோசமான விமர்சனங்களையே பெற்றது.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்-ஆக இருக்கும் கங்கனா அவ்வப்போது சர்ச்சை கருத்தை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துவார். இந்த நிலையில் கங்கனா சமீபத்தில் ஒருவருடன் கைகோர்த்தபடி வந்த புகைப்படம் வெளியாகியது. அந்த நபர் அவருடைய காதலர் என்று தகவல் பரவியது. ஆனால் அவர் தனது 'ஹேர் ஸ்டைலிஸ்ட்' என்று சொல்லி மறுப்பு தெரிவித்தார்.இந்த நிலையில் அயோத்தி குடமுழுக்கு விழாவுக்கு சென்று இருந்த கங்கனா அங்கு தொழில் அதிபர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படம் பரவியது.

இதனை தொடர்ந்து அந்த தொழில் அதிபரை கங்கனா காதலிப்பதாக தகவல் பரவியது. இதற்கு கங்கனா விளக்கம் அளித்த அவர், "தொழில் அதிபரை காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அது வெறும்வதந்திதான். தயவு செய்து பொய்யான தகவல் பரப்புவதை நிறுத்துங்கள். அந்த தொழில் அதிபர் திருமணமாகி குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறார். நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன். அவர் யார் என்பதை தக்க நேரத்தில் அறிவிப்பேன். அதுவரை பொறுத்து இருங்கள்.

இரண்டு பேர் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டால் அவர்கள் உறவை பற்றி தகாத முறையில் யோசிப்பது பேசுவது சரியல்ல'' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்