கதை விவாதத்தில், கவுண்டமணி!

தற்போது நான் கதை விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறேன் -கவுண்டமணி

Update: 2017-06-29 21:30 GMT
‘‘வழக்கம் போல் முகம் தெரியாத–முகவரி இல்லாத அந்த புண்ணியவான் என்னை பற்றி தவறான–உண்மைக்கு புறம்பான வதந்தியை கிளப்பி விட்டுள்ளார். நான் நலமாக இருக்கிறேன். வதந்தியை நம்ப வேண்டாம்’’ என்று நடிகர் கவுண்டமணி விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘‘தற்போது நான் கதை விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறேன். என்னை பற்றி வதந்தி பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் மூலம் போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் கொடுத்து இருக்கிறேன்’’ என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்