விடுமுறை

பிரணிதி சோப்ரா அரசர் காலத்து படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Update: 2018-02-10 11:25 GMT
பாலிவுட் நடிகை பிரணிதி சோப்ரா, அரசர் காலத்து கதையான ‘கேசரி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தில் அக்‌ஷய் குமார் முரட்டு அரசனாகவும், பிரணிதி சோப்ரா அழகான இளவரசியாகவும் நடிக்கிறார்கள். பழங்காலத்து கதை என்பதாலும், பாரம்பரிய உடையில் நடிக்கவேண்டும் என்பதாலும்... அக்‌ஷய் குமார் தாடி-மீசை, கட்டுமஸ்தான உடலுடன் தயாராகி வருகிறார். ஆனால் பிரணிதியோ, மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடி மகிழ்கிறார். காரணம், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பாக மனதை ரிலாக்ஸ் செய்வது பிரணிதியின் ஸ்டைலாம். 

மேலும் செய்திகள்