கருப்பு ‘மேக்கப்’புடன் சரண்யா பொன்வண்ணன்!

‘அருவா சண்ட’ படத்தில், செங்கல் சூளையில் வேலை செய்யும் கூலி தொழிலாளியாக சரண்யா பொன்வண்ணன் நடித்து இருக்கிறார்.

Update: 2018-03-01 21:45 GMT
திராம் டைரக்டு செய்துள்ள ‘அருவா சண்ட’ படத்தில், செங்கல் சூளையில் வேலை செய்யும் கூலி தொழிலாளியாக சரண்யா பொன்வண்ணன் நடித்து இருக்கிறார். இதற்காக அவர் கருப்பு ‘மேக்கப்’ போட்டுக் கொண்டிருக்கிறார்.

படத்துக்காக அவர் ‘டப்பிங்’ பேசியபோது, சோகம் தாங்காமல் கண்கலங்கி அழுதாராம். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த படத்தில், கதாநாயகனாக புதுமுகம் ராஜா நடித்து இருக்கிறார். வில்லனாக ‘ஆடுகளம்’ நரேன் நடித்துள்ளார்!

மேலும் செய்திகள்