சூட்டிங் முடிந்து விட்டது

ஷாருக்கானின் மனைவி கவுரி கான், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு மவுனம் சாதிப்பதுண்டு.

Update: 2018-03-17 09:21 GMT
ஷாருக்கானின் மனைவி கவுரி கான், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு மவுனம் சாதிப்பதுண்டு. ஆனால் சமீபத்தில் மனம் திறந்திருக் கிறார். அதிலும் குறிப்பாக மகள் சுஹானா கானின் திரைப்பட புராஜெக்டுகள் பற்றி பேசியிருக்கிறார்.

“சுஹானாவும், ஆரியனும் லண்டனில் படித்து வருகிறார்கள். ஆனால் சுஹானா இந்தியா திரும்புவதற்குள், அவளது படம் வெளிவந்துவிடும். அதற்கான சூட்டிங் வேலைகள் நடந்து முடிந்து விட்டன. பிரிண்டிங் வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கிறது” என்று குழப்பியவர், “அவள் ஒரு பிரபல பத்திரிகைக்கு மாடலிங் போஸ் கொடுத்திருக்கிறாள். நான் அதைதான் குறிப்பிட்டேன்” என தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

மேலும் செய்திகள்