‘‘ரஜினியை பார்த்து பயம் இல்லை!’’
‘காலா,’ ‘2.0’ படங்களை அடுத்து ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் டைரக்ஷனில் நடிக்க இருக்கிறார்.
ரஜினிகாந்தை இயக்குவது பற்றி டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது:-
‘‘ரஜினிகாந்தின் படத்தை இயக்குவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவரை இயக்க எனக்கு பயம் இல்லை. அவருடைய ரசிகர்களை திருப்தி செய்ய வேண்டும் என்ற பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறேன்!’’