ரசிகர்களுடன், சாய் தன்சிகா!
சாய் தன்சிகா தனது பிறந்தநாளை சத்தமே இல்லாமல் கொண்டாடினார்.
காலையில் எழுந்ததும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டார். பின்னர் ரசிகர்களை சந்தித்து பேசினார்.
பகல் 2 மணிக்கு நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தார். ரசிகர்களுடன் அமர்ந்து அவரும் விருந்து சாப்பிட்டார்!