முதன் முதலாக 2 வேடங்களில் நயன்தாரா!

தமிழ் பட உலகின் ‘பிரபல’ கதாநாயகியான நயன்தாரா, முதன் முதலாக ஒரு படத்தில் 2 வேடங்களில் நடிக்கிறார். அந்த படத்தின் பெயர், ‘ஐரா.’

Update: 2019-01-08 14:43 GMT
கே.எம்.சர்ஜுன் டைரக்டு செய்ய, கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார். படத்தை பற்றி அவர் கூறுகிறார்:-

“நயன்தாரா ஒரே நேரத்தில் பல படங்களில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும், ‘ஐரா’ படத்துக்கு அவர் கொடுத்த ஒத்துழைப்பும், முக்கியத்துவமும் சிறப்பானது. அவரின் 2 கதாபாத்திரங்களில் ஒரு கதாபாத்திரத்துக்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. அதை அவர் சிறப்பாக செய்தார்.

எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கும் அவரது உழைப்புதான், ‘தென்னிந்திய சினிமாவின் ராணியாக உருவாக்கி இருக்கிறது.”

டைரக்டர் கே.எம்.சர்ஜுன் கூறும்போது, “ஐரா என்றால் யானை என்று அர்த்தம். இது ஒரு சூப்பர் நேச்சுரல் திகில் படம். நயன்தாரா தனக்கு இது ஒரு சிறப்பான படமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இரவு-பகலாக உழைத்தார். அவருடன் கலையரசன், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதை-திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியிருக்கிறார்” என்றார்.

மேலும் செய்திகள்