‘பதி’ நடிகர் சம்பளத்தை உயர்த்த முடிவு
‘பதி’ நடிகரிடம் கதை சொல்ல தினமும் 3 டைரக்டர்கள் வருகிறார்களாம்.
தமிழ் திரையுலகில் இதுவரை வராத கதை என்று ஆரம்பிக்கிறார்களாம். ‘பதி’ புத்திசாலியான நாயகன் என்பதால், உடனே நடிக்க சம்மதிப்பதில்லை. நண்பர்களுடன் கலந்து பேசி, அவர்கள் கருத்தை கேட்ட பிறகே நடிக்க சம்மதிக்கிறாராம்.
தன்னை தேடி வருகிற புதுமுக டைரக்டர்களிடம் இருந்து தப்பிக்க ‘பதி’ தனது சம்பளத்தை உயர்த்த முடிவு செய்து இருக்கிறாராம்!