பறக்கும் பாவைகள்!
‘நெடுநல்வாடை’ படத்தின் நாயகி அஞ்சலி நாயர் விமான பணிப்பெண்.
விமான பணிப்பெண்ணாக இருந்து சினிமா கதாநாயகி ஆன முதல் அழகி, காஞ்சனா. ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனுடன் ‘சிவந்த மண்’ படத்தில் நடித்தவர். இவரையடுத்து, ‘காலாட்படை’ நாயகி விதுவும், விமான பணிப்பெண்ணாக இருந்தவர். இவர்களைப்போல் ‘நெடுநல்வாடை’ படத்தின் நாயகி அஞ்சலி நாயரும் விமான பணிப்பெண்.
முதல் படத்திலேயே நிறைய பாராட்டுகளை பெற்ற இவருக்கு புது பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன!