கவர்ச்சி படங்களை வினியோகித்தும் பயன் இல்லை!

மாதவன் நடித்த `இறுதிச்சுற்று' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர், ரித்திகாசிங்.

Update: 2019-03-30 22:00 GMT
ரித்திகாசிங் முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இவர் முன்னணி கதாநாயகிகள் பட்டியலில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவருக்கு `ஆண்டவன் கட்டளை,' `சிவலிங்கா' ஆகிய 2 பட வாய்ப்புகளே வந்தன. பொழுதுபோக்காக சில தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகளே வரவில்லை. அவர் தன்னை விதம் விதமாக கவர்ச்சி படம் எடுத்து அதை பட நிறுவனங்களுக்கு அனுப்பினார். அப்படியும் ரித்திகாசிங்குக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதனால் நொந்து போன அவர், திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை!

மேலும் செய்திகள்